மறுபடியும் கிரீஷுக்கு தொடர்பு செய்து பார்த்தாள் கவிநா. அவன் எடுக்கவில்லை. பயம் அவளை கவிக்கொண்டது. உடல் முழுக்க வேர்வை துளிகள். உடனே எல்லாம் வேலையை போட்டுவிட்டு, வாகனத்தில் ஏறி வீட்டிற்கு சென்றாள். செல்லும் வழியில், மருத்துவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு செய்ய முயற்சி செய்தபோது அவள் கைபேசியில் பெட்ரி இல்லாமல் போனது.
மனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனிக்கவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஓட்டிச் சென்றாள் கவிநா. பலகையில் பலவித ஆணிகள் இருந்தன.
அடுத்த நொடி, வாகனத்தின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், வாகனத்தின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். வாகன உந்து வண்டிக்கு அழைப்பு விடுத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது வாகன உந்து வண்டி.
வீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் ‘மின்தூக்கி உபயோகத்தில் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்!
கதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டுக் கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் விளக்கு பொத்தானை தேடினாள்.
அவள் அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.
அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.
"என்ன இது கிரீஷ்?" அழுகையின் நடுவே கவிநா.
" மன்னிச்சிக்கோ கவி, சாரி... சாரி.." என பலமுறை மன்னிப்பு கேட்டான்.
"இது என்ன விளையாட்டு? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?" அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.
"என்ன கவி இது? இதுக்கு போய். சாரி சாரி,நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா நான் செஞ்சு இருக்க மாட்டேன்,” என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.
"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்." அவன் குரல் சோர்வானது. கிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளைச் சாந்தப்படுத்தியது. கண்களைத் துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்,
"இனிமேல் ப்ளீஸ் இப்படி செய்யாதே! ஆமா, என்ன நடக்குது கிரீஷ்?” வண்ணப்பூக்கள் ஒன்றை கையில் எடுத்தவாறு கேட்டாள். கவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.
அப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே
"பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று சொல்லியவாறு, தன் சட்டை பையில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை அவளுக்குக் கொடுத்தான்.
ஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள்- வைரத்தால் செய்யப்பட்ட ஒரு சங்கிலி. சங்கிலியை அலங்கரிக்கும் வகையில் ‘இதயம்’ வடிவம் அதில் பொரிக்கப்பட்டிருந்தது.
"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை," என்று சிரித்தபடியே கிரீஷ் கவிநாவை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
மனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனிக்கவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஓட்டிச் சென்றாள் கவிநா. பலகையில் பலவித ஆணிகள் இருந்தன.
அடுத்த நொடி, வாகனத்தின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், வாகனத்தின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். வாகன உந்து வண்டிக்கு அழைப்பு விடுத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது வாகன உந்து வண்டி.
வீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் ‘மின்தூக்கி உபயோகத்தில் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்!
கதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டுக் கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் விளக்கு பொத்தானை தேடினாள்.அவள் அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.
அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.
"என்ன இது கிரீஷ்?" அழுகையின் நடுவே கவிநா.
" மன்னிச்சிக்கோ கவி, சாரி... சாரி.." என பலமுறை மன்னிப்பு கேட்டான்.
"இது என்ன விளையாட்டு? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?" அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.
"என்ன கவி இது? இதுக்கு போய். சாரி சாரி,நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா நான் செஞ்சு இருக்க மாட்டேன்,” என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.
"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்." அவன் குரல் சோர்வானது. கிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளைச் சாந்தப்படுத்தியது. கண்களைத் துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்,
"இனிமேல் ப்ளீஸ் இப்படி செய்யாதே! ஆமா, என்ன நடக்குது கிரீஷ்?” வண்ணப்பூக்கள் ஒன்றை கையில் எடுத்தவாறு கேட்டாள். கவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.
அப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே
"பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று சொல்லியவாறு, தன் சட்டை பையில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை அவளுக்குக் கொடுத்தான்.
ஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள்- வைரத்தால் செய்யப்பட்ட ஒரு சங்கிலி. சங்கிலியை அலங்கரிக்கும் வகையில் ‘இதயம்’ வடிவம் அதில் பொரிக்கப்பட்டிருந்தது.
"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை," என்று சிரித்தபடியே கிரீஷ் கவிநாவை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
மெழுகுவர்த்திகள், பூக்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேசை. அதன் மேல் ஒரு கேக். கேக்கில் ரோஸ் வண்ண கீரிமால் எழுதியிருந்தது- ‘என் கவிநாவிற்கு, பிறந்தநாள் வாழ்த்துகள்.’ ஆனந்தத்தால் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. கேக் வெட்டிமுடித்தபின் கவிநா,"எதுக்கு கிரீஷ் இதலாம்? "
“இன்னும் இருக்கு நிறைய. வா," என்றவன் கவிநாவை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த முழு அறையையே அழகிய ரோஜாக்களால் அலங்காரம் செய்து இருந்தான். அதை கண்டு பூரிப்பு அடைந்தவள் படுக்கையில் உட்கார்ந்தாள். இன்னொரு பரிசு ஒன்றை தந்தான். அவளையே ஓவியமாய் வரைந்த ஒரு படம்- அதன் கீழே ஒரு கவிதை.
ஒரு கவிதையே
என் கவிதையை
படிக்க நான் தவம்
செய்திருக்கவேண்டும்.
ஒரு ஓவியத்தையே
நான் ஓவியமாய்
வரைய வரம்
பெற்றிருக்கவேண்டும்!
அவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி, "நீ தான் என் தேவதை" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை அணைத்தபடி தேம்பி தேம்பி அழுதாள். ஆனந்த கண்ணீர் விட்டாள்.
படிக்க நான் தவம்
செய்திருக்கவேண்டும்.
ஒரு ஓவியத்தையே
நான் ஓவியமாய்
வரைய வரம்
பெற்றிருக்கவேண்டும்!
அவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி, "நீ தான் என் தேவதை" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை அணைத்தபடி தேம்பி தேம்பி அழுதாள். ஆனந்த கண்ணீர் விட்டாள்.
எல்லாவற்றையும் ரசித்தாள் அவனுக்காக, அன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்!
*******************************************************************************************************









